Showing posts with label விநாயக சதுர்த்தி. Show all posts
Showing posts with label விநாயக சதுர்த்தி. Show all posts

Sunday, September 4, 2016

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.



விநாயகர் காயத்ரி

ஓம் தத் புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

நந்தோ தந்தி ப்ரசோதயாத்







விநாயகர் திரு நாமங்கள்  



கணேசன்

உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும்

தலைவன்.



ஏகதந்தன் 

ஏக எனில் மாயை; தந்தன் எனில் 

மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் 

விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று 

என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் 

சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் 

ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு 

தந்தத்துடன் விளங்குபவர் என்றும் 

கொள்ளலாம்.  



சிந்தாமணி

சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் 

மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் 

செய்பவன்.



விநாயகன்

வி - நிகரற்ற; நாயகன் - தலைவன். தனக்கு

யாரும் நிகரில்லாத தலைவன்.



டுண்டிராஜன்

மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு 

வழிகாட்டுபவர்.



மயூரேசன்

வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும்

பக்தர்களை மாயை நெருங்காமலும்

செய்பவன்



லம்போதரன்

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் 

பெரிதாகக் காணப்படும் வயிற்றினை 

உடையவன்



கஜானனன்

ஆணவம் எனும் யானையை அடக்கும் 

வல்லமை உள்ளவன்,  யானைமுகன்.



ஹேரம்பன் 

ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் 

ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து 

ரட்சிப்பவன்.



வக்ர துண்டன்



பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை 

தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை 

அன்னை உமாதேவி வைத்தார்.



ஜேஷ்டராஜன்

ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் 

முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி

அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் 

செல்பவன்.



நிஜஸ்திதி


உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் 

இருப்பவன். 




ஆசாபூரன்


எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் 

செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் 

புருசுண்டி முனிவர்.



வரதன்:  



வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.



விகடராஜன்



மாயையான உலகில், உண்மை 

பரம்பொருளாகத் திகழ்பவன்.



தரணிதரன்

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும்

காப்பவன்.



சித்தி - புத்தி பதி

சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி 

எனும்இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் 

தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.



பிரும்மணஸ்தபதி:  


இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது

பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு 

ஆதாரமாக விளங்குபவர்.



மாங்கல்யேசர்

அழியக்கூடிய உலகில், தான் மட்டும் 

அழியாமலிருந்து அனைத்தையும் 

பரிபாலிப்பவர்



சர்வ பூஜ்யர்

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா 

தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக 

பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும்


 வணங்கப்படுபவர்.



விக்னராஜன்

தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது 

வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் 

காப்பவர்






அருகம்புல்

ஒரு முறை தேவர்களை கொடுமைப்படுத்திய 
அனலாசுரன் என்னும் அரக்கனுடன் விநாயகப் 
பெருமான் போர் புரிந்தார்.   அப்போது, 
அனலாசுரனை தன் வாயில் போட்டு விழுங்கி
 விட்டார்.  உள்ளே சென்ற அரக்கனின் அனல் 
காரணமாக விநாயகரால் வெப்பத்தை தாங்கிக் 
கொள்ள முடியவில்லை.  முனிவர்கள் பலரும் 
எந்த முயற்சி செய்தும் பலன் இல்லை.  பிறகு 
அருகம் புல்லை மாலையாககட்டி போட்டதும்
 அனல் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது.  அது 
முதல் விநாயகருக்கு அருகம்புல் மாலை 

அணிவிப்பது வழக்கமாயிற்று.




Tuesday, September 15, 2015

பிள்ளையார்பட்டி ஹீரோ



 

 







இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடு செய்து, விரதமிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம் அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.  




இந்த ஆண்டு ஆவணி மாதம் 31ஆம் நாள் வியாழக்கிழமை 17.09.2015 இந்த விரத தினம் சம்பவிக்கின்றது.   




பிள்ளையாரின் அவதார தத்துவம்.


பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.




உண்மையில் விநாயகர் அவதரித்த நாளையே விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடாட்ப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து 'வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேஷன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென 'நாரத புராணத்தில்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். அது சம்பவித்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் இந்து மதத்தின் உயர்வான ஒரு புனித தினமாக ஆகிவிட்டது.





 அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.