Thursday, February 8, 2018


காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்''
......
உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.

Image may contain: drawing


''ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.
அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம் காட்டிக் கொடுத்தது. இதை மகா பெரியவாளும் கவனித்திருக்கவேண்டும். தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.
பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ''எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். 'காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்'' என்றார் குரல் தழுதழுக்க.
''ஓஹோ... அப்படியா சொன்னார்..?'' என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.
அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும்! தொடர்ந்து... ''எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா... இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா... தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்'' என்று கதறினார்.
பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க... நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ''இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!'' என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.
பெரியவாளுக்கு பி¬க்ஷ தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பி¬க்ஷயில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பி¬க்ஷ செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ''எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்!'' என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.
உடனே, '''என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு... இப்ப ஏன் போகணும்கறே?'' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.
எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ''இல்லே பெரியவா... சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்...'' என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.
வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் 'வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். 'வயிறு’ கிடைக்கவே இல்லை.
உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.
''என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.
பாலுவுக்கு ஒரே குழப்பம். 'யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் 'வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.
'பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே... பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.
பிறகென்ன... சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.
மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.
''பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்'' எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ''சரிதான்... என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!'' என்றார் புன்னகைத்தபடி!
சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் 'வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!



No automatic alt text available. 


புகைப்படங்கள் வரைந்தவர்: சுதன் காளிதாஸ்

Thursday, February 1, 2018

பெரியவா சரணம் !!

Image result for arthanareeswarar


"" பெரியவா என்னிடம் கேட்டதை நீ கவனிக்கவில்லையா? தானே அர்த்தநாரீஸ்வரர் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டாரே , உனக்கு புரியலையா? ""

ஸ்ரீ மஹா பெரியவா யாரோடும் அதிகம் பேசாமல் ஜாடை மாடையாக இருந்த சமயம். எனது மாமியார் ஜெயலஷ்மி ( பொள்ளாச்சி ஜெயம் என்று ஸ்ரீ மடத்தில் அழைக்க பட்டவர் ) பெரியவா தரிசனத்திற்கு சென்று இருந்தார்கள் . நமஸ்கரித்து விட்டு சற்று ஒதுஙகி நின்று கொண்டு இருந்தார் .அப்போது பெரியவா கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீ மேடம் பாலு (பிற் காலத்தில் பாலு ஸ்வாமிகள் ஆகி சமீபத்தில் சித்தி ஆனவர்.

“ஜெயம் நீ பெரியவா பாதுகையே வாங்கிக்கவில்லையே நீ பெரியவாளிடம் கேள் . நிச்சியம் உனக்கு கொடுப்பர் என்று சொன்னார் . உடனே அம்மா நான் போய் கேட்க மாட்டேன் . அவராக கொடுத்தால் கொடுக்கட்டும்” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார் தீவிர பக்தியோடு பிடிவாதமும் பெரியவாளிடம் ஸ்வாதீனமும் உடையவர் எங்கள் அம்மா.

சிறிது நேரம் கழித்து பெரியவா இருந்த இடத்திற்கு அம்மா வந்தாள். இடையில் என்ன நனடந்தது என்று தெரியாது. மஹா பெரியவா அர்த்த புஷ்டி உடன் கைங்கரியம் பாலுவை பார்க்க , அவர் உடனே உள்ளே சென்று ஒரு ஜோடி பாதுகையை கொண்டு வந்து பெரியவா முன் வைத்தார். பெரியவா அந்த கால கட்டத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தரிசனம் கொடுப்பது வழக்கம். ஸ்ரீ பாலு கொண்டு வந்த பாதுகையை பெரியவா தன பாதங்களில் மாட்டி கொண்டார்.

சிறிது நேரம் கழித்து பாலு மாமா பெரியவா பாதத்தில் இருந்து கழட்ட முயற்சி செய்தபோது பெரியவா அனுமதிக்க வில்லை .கால்களை உள்ளே இழுத்துக்கொண்டார்கள். இரெண்டு மூன்று முறை முயற்சி செய்தும் , கூடயஇருந்த தொண்டர் முயற்சித்த போதும் அனுமதிக்கவில்லை . ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் பெரியவா பாதத்தை அந்த பாதுகை அலங்கரித்து கொண்டிருந்தது.

மஹா பெரியவாளுடன் பல ஆண்டுகள் இருந்ததால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பாலு மாமா போன்றவர்கள் ஊகிக்க கூடியவர்களாகவே இருந்தார்கள். பாலு மாமா அம்மாவிடம் வந்து
“ஜெயம் பாதுகை உனக்கு தான் . எங்களை கழட்ட விடவில்லை பெரியவா. நீயே போய் கழட்டி கொள்” என்றார்.

அம்மா நடுங்கி பொய் விட்டாள்.

“ஐயய்யோ நான் மாட்டேன்” என்று சொல்லி விட்டார் .

“சரி நீ பெரியவா முன்னே போய் நில்லு . என்ன நடக்கிறது என பார்ப்போம்” என்று பாலு மாமா சொல்ல , தைரியத்தை வரவழைத்து கொண்டு , அம்மா பெரியவா முன் பொய் நின்றாள்.

என்ன ஆச்சரியம்

மஹா பெரியவா தன பாதங்களை சற்றே தூக்கி அம்மாவின் முன் நீட்டினார்கள். இதனை பார்த்து கொண்டிருந்த பாலு மாமா, “கழற்றி கொள்” என்று அம்மாவை தூண்டி விட அம்மாவும் மிகுந்த பயத்துடன் , பெரியவா பாதங்களில் இருந்து பாதுகைகளை கழற்றி கொண்டு , நமஸ்கரித்து விட்டு , மெல்ல நகர்ந்தாள் .

Periyava Padhukas

நாலடி சென்ற பின் கையில் இருந்த பாதுகையை பார்த்த அம்மா, ஏதோ சந்தேகத்துடன் பெரியவாளை திரும்பி பார்க்க, தன மௌனத்தை கலைத்து கொண்டு “இடது பாதம் தானே சின்னதா இருக்கு போ போ” என்று உரக்க சொன்னார்கள்.

அம்மாவிற்கு சுரீர் என்று அதற்க்கான விளக்கம், வெளிப்படையாக சொல்லாமலே புரிந்தது. கைகளில் இருந்த பாதுகைகளை பார்த்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றாள். நடந்து கொண்டிருந்த மௌன காட்சிகளை பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. அவர்கள் அனைவரின் கண்களும் அம்மாவின் கைகளில் இருந்த மஹா பெரியவா பாதுகைகளிலேயே இருந்தது .

மகா பெரியவா ,விஸ்ராந்திக்கு (ஓய்வு ) சென்ற பின் , பாலு மாமா அம்மாவிடம் வந்து, “ஜெயம் என்ன விஷயம்” என கேட்க, அம்மா எதுவும் சொல்லாமல் தன் கைகளில் இருந்த பாதுகைகளை காண்பித்தாள். வலது பாதுகையை விட இடது பாதுகை அளவில் சற்று சிறியதாக இருந்தது ..

அதை பார்த்தவுடனே “அடடா வித்தியாசமாக இருக்கே, அவசரத்தில் நான் கவனிக்க வில்லை . வேணும்னா வேறு பாதுகை பெரியவா கிட்டே இருந்து வாங்கி தரட்டுமா?” என்று கேட்டார்.

உடனே அம்மா “என்னடா பாலு, இடது பாதம் தானே சின்னதா இருக்கு? என்று பெரியவா என்னிடம் கேட்டதை நீ கவனிக்கவில்லையா? தானே அர்த்தநாரீஸ்வரர் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டாரே , உனக்கு புரியலையா? அம்பாள் பாதம் ஸ்வாமியின் பாதத்தை விட சிறியது இல்லையா?” என்று அம்மா கேட்டதும் பாலு மாமா அந்த இடத்திலேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

இதில் விசேஷம் என்னவென்றால், அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகையில் இடது பாதுகை சிறியதாக இருந்தது மாத்திரம் இல்லை, பாதுகையில் கட்டை விரல் மாட்டி கொள்வதற்கு குமிழ்கள் இருக்கிறதல்லவா? அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகையில் வலது பாதுகையின் குமிஸ் சற்று கடினமாக. பெரியதாக ஆண்மையுடன் இருக்கும். இடது பாதுகையின் குமிஸ் சற்று நளினமாக சிறியதாக பெண்மையுடன் இருக்கும்.

இப்படி அமைந்தது , எங்கள் அம்மாவின் அசைக்க முடியாத பெரியவா பக்திக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். எங்கள் இல்லத்தில்( வெப்பத்துர் )பூஜையில் இருக்கிறது. கையில் கிடைத்ததை பாலு மாமா எடுத்து வந்திருந்தாலும் அவரை இவ்வாறு எடுத்துவர செய்தது அந்த பரப்ரம்மம் தானே!

சரணம் ! சரணம் ! குரு பாதுகா சரணம் ! மஹா பெரியவா சரணம்

திருமதி லலிதா சந்திரசேகர்
ஜெயம் பாட்டியின் மாட்டு பெண்
32, பெருமாள் கோவில் தெரு
வேப்பத்தூர் 612 105

காஞ்சி மஹானின்
பாதுகா மஹிமை என்ற புத்தகத்தில் இருந்து
எடுக்கப்பட்ட நகல்
சங்கரன் ராஜகோபாலன்.

-------------------------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்




Periyava_chandramouliswarar_puja_color

Thursday, January 25, 2018

  

 

ஒரு 'ரிடையர்' ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்"

Image may contain: 1 person, drawing

(படித்தால் புல்லரிக்கும்)


தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு பக்தர்....தினசரி மடத்திற்கு வரக்கூடியவர். அன்று மகானின் முன் நின்றபோது, அவரது முகத்தில் கவலை ரேகைகள். இதைக் கவனித்த பெரியவா....

"ஏன் என்ன விஷயம்?" என்று அன்பொழுகக்
கேட்கிறார்.

"ரிடையர் ஆன பிறகு நான் மிகவும்
கஷ்டப்படுகிறேன்.." என்கிறார் அவர்.

"ஏண்டா?" பெரியவா கேட்கிறார்.

"யாரும் வீட்டில் என்னை மதிப்பதே இல்லை... கவனிப்பும் சரி இல்லை. காப்பி கூட சமயத்தில்கிடைப்பதில்லை" என்று சொல்லிக் கொண்டே போனார்.

அவரது மனக்குமுறல்களை புன்சிரிப்போடு
கேட்டுக் கொண்டு இருந்தார் அந்த மகான்.

"உத்தியோகத்தில் இருக்கும்போதே இறந்திருக்கலாம் போல் எண்ணத் தோன்றுகிறது. பையன்கள் கூட
என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்" என்று முடித்தார் அம்முதியவர்.

பெரியவா அமைதியாகச் சொன்னார்....

"இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நீ இப்போது ஆபீசுக்குப் போவதில்லை இல்லையா? காலையில் எல்லாருக்கும் முன் எழுந்து,குளித்துவிட்டு
ஜெபம் செய்...அதைப் பார்க்கும் குடும்பத்தினர் உனக்கு பயபக்தியோடு காப்பி கொண்டு வந்து கொடுப்பார்கள். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்....

பேரன்களுக்கு படிப்பு சொல்லிக் கொடு...அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போ....

அதோடு அவர்கள் இதைச் செய்ய வேண்டும்......அதைச் செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்காதே....எதிர்பார்ப் புதான் ஏமாற்றத்தைக் கொடுக்கும்....

இல்லையென்றால் எல்லாமே தானாகவே நடக்கும்"

வேதனையோடு வந்தவர்க்கு தன்னிடம் உள்ள குறையும் தெரிந்தது.. அடுத்தபடியாக தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

" நீ மனதைத் தெளிவாக வைத்துக் கொள்...

பகவானை நினைத்துக் கொண்டே இரு...

இது வேண்டும்...அது வேண்டும் என்று ஆசைப்படாதே.. நீ வளர்த்த குழந்தைகள் உன்னை நிச்சயமாகக் கவனிப்பார்கள்" என்றார்.

வயோதிகத்தில் எல்லாருக்கும் வரும் மனவியாதி இது..

ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும்
அனுபவிக்கவும் முடியாது.....அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது...

காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ளவேண்டும் என்பது தான் வாழ்க்கை முறை.

பெரியவா உபதேசம் செய்து முடித்தவுடன்

அப்பெரியவரின் மகன், அவரை தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டான், வீட்டிற்கு அழைத்துப் போக.

பொருள் பொதிந்த புன்னகையோடு மகான், அவரை மகனுடன் அனுப்பி வைத்தார்.

மனிதநேயத்தோடு எல்லாவற்றையும் பார்க்கிறார் என்பதற்கு இது ஒரு மகத்தான உதாரணமல்லவா.

Image may contain: 4 people, people smiling, drawing


HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

படங்கள் வரைந்தவர்: திரு சுதன் காளிதாஸ்

Monday, January 22, 2018






*ரத  சப்தமி* 
 
24.01.2018 
புதன்கிழமை

ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக்   கொண்டி ருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்க, '' இரு கொண்டுவருகிறேன்''  என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து  கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .  

''ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்''  என கோபித்து சாபமிட்டான்.

பிராமணனின்ரி சாபம் கேட்டு  அதிர்ச்சியடைந்த அதிதி  காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல,  ''நீ இதற்கெல்லாம் வருந்தாதே,  அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்'' என்று வாழ்த்த  ஒளி பிரகாசமான  சூரியன் மகனாக பிறந்தான்.  ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ரத சப்தமி அன்று  ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். 24.01.2018 பதன் அன்று  அதிகாலை  ஸ்நானம் பண்ண வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

ரத சப்தமி அன்று  தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும்.  . ஏழு மலைகளை  ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று  ஏழு வாகனங்களில் மலையப்பர்  சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


Image result for ரத சப்தமி



ஒரு கதை சொல்கிறேன்.
Image result for ரத சப்தமி


மகாபாரதப் போரில் அர்ஜுனனால் /அம்பையால்  வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட  அம்புப் படுக்கையில் காத்திருந்தார்.  உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை.  அவரைப் பார்க்க வேத வியாசர் வந்தார்.

''வியாஸா,  நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று பீஷ்மர் கேட்டார்.

"பீஷ்மா, நீ மனோ வாக்கு  காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும்  பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்தது பாபம்.  அதற்கான தண்டனையிலிருந்து தப்பமுடியாது.'' என்கிறார் வியாசர்.

சபை நடுவே பாஞ்சலியின் உடையை  துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் செய்த  மிகப்பெரிய தவறு என பீஷ்மர் உணர்ந்தார்.

''வியாஸா இதற்கு விமோசனம் எது ?

'பீஷ்மா  எப்பொழுது உன் தவறை  உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர்.

''இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், ''அர்க்கம்'' என்றால் சூரியன்.  இதை  தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை.அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்கஇலையால் அலங்கரிக்கிறேன் என்றார். உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்''.

நமது பாபங்கள் தீர  நாமும்  எருக்க இலையை என்று தலையில் வைத்து ஸ்நானம் செய்வது இதற்காகத்தான்.
எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு அல்லவா?

Wednesday, January 17, 2018


தை பிறந்தது 
மேளமும் கொட்டியது


Image may contain: 1 person, drawing



 


காஞ்சிப்பெரியவருக்கு 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன் என்பவர் கூறிய தகவல் நம்மை பரவசமடைய செய்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு கார்த்திகை மாதத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஒரு தம்பதி தங்கள் மகளுடன் காஞ்சிபுரம் வந்தனர். மகாபெரியவரை தரிசிக்க காத்திருந்தனர். அவர்கள் முறை வந்ததும் அந்த குடும்பத்தினர் பெரியவருக்கு நமஸ்காரம் செய்தனர்.

அவரைப் பார்த்து தயக்கத்துடன் நின்ற குடும்பத்தலைவரிடம், "என்ன விஷயம்?'' என்று பெரியவர் கேட்டார்.

"பெரியவா! இவள் எங்களுக்கு ஒரே மகள். இவளுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. தாங்கள் அனுக்கிரகம் செய்து, திருமணம் விரைவில் நடக்க ஆசி வழங்க வேண்டும்,'' என்றார் குடும்பத்தலைவர்.

பெரியவர் அந்தப் பெண்ணிடம், "உன் பெயர் என்ன?'' என்றார்.

"ராதா' என்றாள் அவள்.

பெரியவர் அவளிடம், "உங்கள் ஊரில் பெருமாள் கோவில், சிவன் கோவிலெல்லாம் இருக்கிறதா?'' என்றார்.

"ஆம்' என்றாள் அவள்.

"சரி...அடுத்த மாதம் மார்கழி. தினமும் அதிகாலையில் நீராடிய பிறகு வீட்டு வாசலில் கோலம் போடு. பெருமாள் கோவிலுக்குப் போய் திருப்பாவை பாடு, சிவன் கோவிலுக்கு போய் திருவெம்பாவை பாடு. உனக்கு போக முடியாத நாட்கள் வருமில்லையா! அந்த நாட்களில் வீட்டில் இருந்தே அந்த பாடல்களை பாராயணம் செய்,'' என்று சொல்லி ஆசிர்வதித்தார்.


Image may contain: 1 person, drawing


ராதாவும் பெரியவர் சொன்னதை தவறாமல் கடைபிடித்தாள். தை மாதம் பிறந்தது. ஒரு நன்னாளில் அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ராதாவின் பெற்றோர் கதவைத் திறந்தனர். 

வெளியே ஒரு பெரியவரும் அவரது மனைவியும் நின்றனர். அவர்கள் ராதாவைப் பெண் கேட்டு வந்துள்ள விபரம் தெரியவந்தது.

"எங்கள் பூர்வீகம் பாலக்காடு. உங்கள் பெண்ணைப் பற்றி அறிந்தோம். அவள் ஜாதகம் எங்கள் மகன் ஜாதகத்துக்கு பொருத்தமாயிருக்கிறது,'' என்றனர்.

திருமணப் பேச்சு நடந்தது. நிச்சயதார்த்த நாள், முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது. தை பிறந்ததும் ராதாவுக்கு வழியும் பிறந்து விட்டது.

திருமணத்துக்கு முன்னதாக பெரியவரிடம் ஆசி பெற ராதாவும், அவளது பெற்றோரும் காஞ்சிபுரம் வந்தனர். பெரியவரை அவர்கள் தரிசித்தனர்.

ராதாவிடம், "உன் பெயர் ராதா தானே! உனக்கு வரப்போகும் ஆத்துக்காரர் பெயர் என்ன?'' என்று கேட்டார்.

"கண்ணன்'' என்ற ராதாவிடம், "உன் மாமனார் பெயர் பரமேஸ்வரனா?'' என்றார்.

"ஆம்...என்றாள் ராதா ஆச்சரியமாய்.

"மாமனார் பெயர் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?' என்று அவள் ஆச்சரியப்பட்ட வேளையில், "நீ திருப்பாவை படித்தாய், கண்ணன் கணவனாக வருகிறான். திருவெம்பாவை படித்தாய், பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,'' என்றார்.

இதைக் கேட்ட எல்லாருமே அதிசயித்துப் போனார்கள். முக்காலமும் உணர்ந்த ஞானிக்கு இவர்கள் பெயர் தெரியாதா என்ன!

 படங்கள் வரைந்தவர்: திரு சுதன் காளிதாஸ்



Related image

Thursday, January 11, 2018





 






பெரியவா  பாதமே சரணம்




Image may contain: drawing

கல்யாணம்,  மத்த விசேஷம், சாதாரணமாக  வீடுகளில் போஜனம்  எப்படி சாப்பிடுறோம்?''  என்று பெரியவா கேட்டார்.

வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''

அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"

''ஓ அதை கேக்கறேளா  பெரியவா.  மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.    மௌனமாக இருந்தார்கள்.   தெரியும் அவரே பதில் சொல்வார்  என்று. 

"மொதல்ல குழம்பு.இதுல, 'தான்' இருக்கு.  தான்  என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா  ஏதோ ஏதோ  இருக்குமே  அது தான் '' தான் '' என்பது இல்லையா.  நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் ''  என்கிற  அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம்.அந்தத்  ''தானை''  கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த  கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால்   ஒரு தெளிவு வந்துடறது இல்லையா.  அதாவது ''ரச'' மான மன நிலை.அதுதான் ரசம்.    ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது. 

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..

கடோசியா மோர்.   மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?  

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்
வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது. 

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது? 

நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு,யாருக்கும் எந்த உபத்ரவமும்  பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் 
பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப்
பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம  வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான்  அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார் மகாபெரியவா.





Image may contain: 1 person, smiling, standing



படம் வரைந்தவர்: திரு சுதன் காளிதாஸ்

Thursday, January 4, 2018





அவர்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்தார்கள். ‘‘என்னது… மகா பெரியவா எங்களைக் கூப்பிடறாரா?’’

  Image may contain: drawing

அன்றைய தினமும் அப்படித்தான். மகா பெரியவாளைத் தரிசிக்கக் கூடி இருந்த பக்தர்களுள் பலரது முகத்தில் ஏதோ எதிர்பார்ப்புகள். வேண்டுதல்கள்.

அவரவர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளைக் குருவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றில் பழங்கள், உலர்வகை பழங்கள், முந்திரி, வில்வ மற்றும் துளசி மாலைகளும் அடங்கும்.

பக்தர்களோடு பக்தராக அங்கே கலந்து ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தனர், நாராயணன் – வைதேகி தம்பதியர். சென்னையில் வசிப்பவர்கள். நாராயணன் உத்தியோகஸ்தர்.
நாராயணனது இடுப்பில் அவர்களது ஒண்ணரை வயது பெண் குழந்தை நிதர்சனா அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தது.

விழிகளை உருட்டி உருட்டி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். புதுப் புது மனிதர்களே எங்கும் தென்பட்டதால், குழந்தையின் முகத்தில் ஒரு மிரட்சி தெரிந்தது.

‘மகா பெரியவா அருகே செல்ல வேண்டும்… அந்த மகானிடம் தங்களது பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும்’ என்பது இந்தத் தம்பதியர்களின் விருப்பமாக இருந்தது.

ஆனால், அன்றைக்குக் கூடி இருந்த பக்தர்கள் கூட்டத்தில் இவர்களால் ஒரு இஞ்ச் கூட முன்னேறிச் செல்ல முடியாத சூழ்நிலை.

எனவே, தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே மகா பெரியவாளின் திருமுக தரிசனத்தை எம்பி எம்பிப் பார்த்து கன்னத்தில் போட்டபடி இருந்தனர்.

‘‘ஏங்க, கூட்டம் இவ்ளோ இருக்கே… நிதர்சனாவைப் பெரியவாகிட்ட கூட்டிண்டு போய் காட்ட முடியுமாங்க? அந்த தெய்வத்தின் அனுக்ரஹப் பார்வை இவ மேல் திரும்புமாங்க?’’ என்று வைதேகி, நாராயணனைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டாள்.

‘‘இன்னிக்கு அந்த மகானோட அனுக்ரஹம் கிடைக்கணும்னு நமக்கு விதி இருந்தா கிடைக்கும். பார்ப்போம், குருவோட பார்வை நம்ம மேல திரும்பறதானு…’’ என்று மகா பெரியவாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி உருக்கத்துடன் சொன்னார் நாராயணன்.

வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களது பிரார்த்தனையை மகானிடம் சென்று சொல்ல வேண்டும்… இதற்கு சாதகமாக ஒரு அருளாசி அவரிடம் இருந்து பெற வேண்டும் என்று இருந்ததே தவிர, தரிசனத்துக்காகக் காத்திருக்கும் குழந்தைகளுக்கோ, பெரியோர்களுக்கோ ஒரு முன்னுரிமை கொடுத்து அவர்களை முதலில் அனுப்ப வேண்டும் என்று யாருக்கும் கவலை இல்லை. அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை.

மகானின் சந்நிதி முன்னாலும், எல்லோரும் சுய நலத்துடன் காணப்பட்டார்கள்.

மகா பெரியவா அருகே வரும் பக்தகோடிகளை அவரது சிஷ்யர்கள் கட்டுப்படுத்தி, அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

வழக்கம்போல் மகா பெரியவா அங்கே திரண்டிருந்த பக்தகோடிகளைத் தன் அனுக்ரஹப் பார்வையால் ஒரு முறை அலசினார்.

தன்னைத் தரிசிக்க ஆத்மார்த்தமாக வந்திருக்கும் நாராயணன் – வைதேகி தம்பதியருக்கு அன்றைய தினம் யோகம் அடித்தது.

அடுத்த விநாடி ஒரு சிப்பந்தியை ஜாடை காட்டித் தன் அருகே அழைத்தார் மகா பெரியவா. குழந்தை நிதர்சனாவை இடுப்பில் சுமந்து கொண்டிருக்கும் நாராயணனை அடையாளம் காண்பித்து, ‘அவாளைக் கொஞ்சம் கிட்டக்கக் கூட்டிண்டு வா’ என்று சைகை செய்தார் மகான்.

அந்த சிப்பந்தி கூட்டத்தை விலக்கிக் கொண்டு நாலடி பாய்ச்சலில் ஓடிப் போய் நாராயணன் – வைதேகி தம்பதியரிடம் விஷயத்தைச் சொல்ல… அவர்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்தார்கள். ‘‘என்னது… மகா பெரியவா எங்களைக் கூப்பிடறாரா?’’

‘ஆமா… வாங்கோ, சீக்கிரம். உங்களுக்குத்தான் உத்தரவு ஆகி இருக்கு.’’

கணவன், மனைவி இருவரின் விழியோரங்களும் நெகிழ்வின் காரணமாக கண்ணீர் சொரிந்தன.

குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் மகா பெரியவாளை வணங்கியபடியே நடந்தார் நாராயணன்.

‘‘வழி விடுங்கோ… வழி விடுங்கோ…’’ என்று உரக்கக் கூவிக் கொண்டே சிப்பந்தி முன்னால் செல்ல… பின்னால் நாராயணனும் வைதேகியும் நடந்தனர்.

மகா பெரியவா அருகே இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்திய சிப்பந்தி, பெரியவாளுக்குத் தகவல் தெரிவித்தார்.

கலியுக தெய்வத்தின் பார்வை தம்பதியின் மேல் விழுந்தது. ‘‘இடுப்புல வெச்சிண்டு இருக்காளே… அது அவாளோட குழந்தையானு கேளு…’’ – தன் பக்கத்தில் இருந்த சிப்பந்திக்கு பெரியவா உத்தரவு!

இந்தக் கேள்வி அப்படியே ஓவர் டூ தம்பதியர்.

வந்த பிரார்த்தனையே அதுதானே!

குழந்தையை முன்னிறுத்தித்தானே இன்றைக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கிறார்கள் இவர்கள்!

இவ எங்க கொழந்தைதான் பெரியவா…’’ – நாராயணன் நெக்குருகச் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல் வைதேகியும் கண்கள் கலங்க… பெரியவாளையும் நிதர்சனாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குழந்தையைப் பார்த்துப் பெரியவா புன்னகைத்தார்.

குழந்தையும் பதிலுக்குப் புன்னகைத்தது.

அதன்பின் மகா பெரியவா தனக்கு அருகில் இருந்த ஒரு மூங்கில் தட்டில் இருந்து சிறிது உலர் திராட்சைகளை அள்ளி, சிப்பந்தியிடம் கொடுத்தார். ‘‘அந்தக் கொழந்தைகிட்ட கொடு.’’
திராட்சை இடம் மாறியது.

தன் பிஞ்சுக் கைகளை நீட்டியபடி அத்தனை திராட்சைகளையும் இரண்டு உள்ளங்கைகளுக்குள் அடக்க முற்பட்டது குழந்தை. அம்மாவும் இதற்கு உதவினார்.

மகா பெரியவா திருச்சந்நிதியிலேயே அந்த திராட்சைகளில் இருந்து இரண்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டது குழந்தை.

நாராயணனுக்கும் வைதேகிக்கும் கண்கள் குளமாயின என்று சொன்னால், அது சாதாரணம்.

இருவரும் குழந்தையை வைத்துக் கொண்டு தேம்புகிறார்கள்.

வந்த கார்யம் முடிந்து விட்டது. அந்தப் பரப்பிரம்மம் தன் வலக் கையை உயர்த்தி, இவர்களுக்கு விடை கொடுத்தது.

இத்தனை பக்தகோடிகள் கூடி இருக்கிற இடத்தில், மிகவும் ஆத்மார்த்தமாக வந்திருக்கிற ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுத்துத் தன் அருகே வரவழைத்து அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து விட்டார் மகா பெரியவா.

அடுத்து, மகானது பார்வை கூட்டத்தைத் துழாவியது.


அடுத்த அதிர்ஷ்டம் யாருக்கோ?!

காஞ்சி ஸ்ரீமடத்தை விட்டு வெளியே வந்தார்கள் நாராயணனும் வைதேகியும்!

இன்னமும் இடுப்பிலேயே இருந்தாள் நிதர்சனா!

இதுவரை அநேகமாக ஏழெட்டு திராட்சையை சாப்பிட்டிருப்பாள்.

மகா பெரியவா பிரசாதம் இன்னமும் அவள் கையில் இருந்தது.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சென்னைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள் மூவரும்.

மிதமான கூட்டத்தோடு பஸ் புறப்பட்டது.

மூவர் அமரக் கூடிய ஒரு இருக்கையில் ஜன்னல் ஓரமாக நிதர்சனாவும், அவளுக்கு அருகில் நாராயணனும் வைதேகியும் அமர்ந்தார்கள்.

பஸ் புறப்பட்டு ஐந்து நிமிடம் ஆகி இருக்கும்


Image may contain: 1 person, smiling, drawing



திடீரென நாராயணனின் கன்னத்தையும், சற்று எம்பி வைதேகியின் கன்னத்தையும் தடவி, ‘‘அம்மாமா… அப்பாபா…’’ என்று குரல் உயர்த்திக் குழந்தை பேச ஆரம்பித்தபோது, தாயும் தகப்பனும் போட்ட விநோதக் கூச்சலில் ஒரு விநாடி அதிர்ந்து சடன் பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார் டிரைவர்.

‘என்ன பிரச்னையோ?’ என்று டிரைவர், தன் இருக்கையில் இருந்தே திரும்பிப் பார்க்க… கண்டக்டர் ஓடி வந்து, ‘‘என்னம்மா…’’ என்று கரிசனத்துடன் விசாரிக்க…
கண்களில் உடைப்பெடுத்துப் பெருகும் நீருடன் எல்லோரையும் பார்த்து வைதேகி சொன்னாள்: ‘‘எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க. எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க… ஒண்ணரை வருஷமா பேசாம இருந்த கொழந்தை இப்ப பேசுது. இவளோட மழலை மொழியை இப்பதான் கேக்கறேன்.’’

பஸ்ஸில் இருந்த அத்தனை பேரும் எழுந்து வந்து குழந்தையின் கன்னம் தொட்டுக் குதூகலித்தனர்.

ஆம்! நிதர்சனா பிறந்தது முதல் தற்போது வரை (ஒண்ணரை வயது) எந்த ஒரு வார்த்தையும் பேசியதில்லை.

வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோயில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை.

ஆனால், அத்தனையும் தாண்டி, ஒரு கலியுக தெய்வம் தனக்கு பிக்ஷையாக வந்த திராட்சையைக் கொண்டே இவர்களின் பிரச்னையைத் தீர்த்து விட்டது.

குடும்பத்துக்கே பிரசாதமாக வந்த திராட்சை குழந்தை நிதர்சனாவுக்கு மட்டுமில்லை.

நாராயணன் அவர் புரிந்து வரும் உத்தியோகத்தில் அடுத்தடுத்து நல்ல மாற்றங்கள். பிரமோஷன், சம்பள உயர்வு என்று எல்லாம் கிடைத்தன.

மகா பெரியவாளுக்கு சுமார் 97 வயது இருக்கும்போது நடந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று.

ராகவேந்திரரும், ஷீர்டி பாபாவும் காலங்களைக் கடந்தும் தங்களது பக்தர்களுக்கு – தங்களை நம்பியவர்களுக்கு அபயம் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நம் பக்கத்திலேயே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம் நாம்!

மகானின் திருச்சந்நிதி தேடி காஞ்சிக்கு ஒரு முறை போய் வாருங்கள்!

உங்கள் உதடுகள் பேச வேண்டாம். மனம் அவரோடு பேசட்டும்.

உணர்வுகளைப் புரிந்து கொள்வார். உள்ளத்தை அறிந்து கொள்வார்.

‘குருவே சரணம்’ என்று அவரது திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்.

உங்களை ஆசிர்வதித்து அருள அவர் தயாராக இருக்கிறார்.

கட்டுரையாளர்: பி. சுவாமிநாதன்..... Pitchai Iyer Swaminathan






Image may contain: drawing




மூன்று படங்களையும் வரைந்தவர்: திரு சுதன் காளிதாஸ்



Thursday, October 5, 2017

இத்தனை விஷயங்களா? என்று நம்மை மலைக்க வைக்கும் !  ஸர்வஜ்ஞரான மஹா பெரியவா நடராஜா பற்றிச் ​சொன்னது.

Image may contain: 3 people, drawing


                                          PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS





சிவன் கோவில்ல எல்லாம் "வ்யாகரண தான மண்டபம்"ன்னு ஒரு மண்டபம் இருக்கும். "வக்காணிக்கும் மண்டபம்" ன்னு திரிச்சு சொல்லுவா. நன்னா வக்கணையா பேசுன்னு சொல்றதே "இலக்கண சுத்தமா"பேசறதுன்னு அர்த்தம். திருவொற்றியூர்ல கூட இந்த மண்டபம் இருக்கு. சிவன் கோவில்ல மட்டும் ஏன் இப்டி ஒரு மண்டபம் இருக்கு? விஷ்ணு கோவில்ல ஏன் இல்லை? ஸிவனுக்கும் பாஷைக்கும் என்ன ஸம்பந்தம்? பேச்சே இல்லாத தக்ஷிணாமூர்த்தியா இருக்கறவராச்சே பரமேஸ்வரன்? ஒரு ஸ்லோகத்ல, பேசாத சிவன் ஆடாம அசங்காமத்தான் இருப்பார். ஆனா, அவரே ஒரே ஆட்டமா ஆடறப்போ தான் பாஷா சாஸ்திரமே பொறந்ததுன்னு சொல்லியிருக்கு. ஆடகின்ற சிவனுக்கு நடராஜான்னு பேர். 'மஹாகாலோ மஹாநட:'ன்னு அமரகோசம் சொல்றது. அம்பலக்கூத்தாடுவான் பட்டன் ன்னு ப்ராஹ்மணாளும் ஆதியில நல்ல தமிழ் பேராத்தான் வெச்சிண்டிருந்திருக்கா. பம்பாய்ல ஒரு பிரிண்டிங் ப்ரஸ்ல [நிர்ணயஸாகரா பிரஸ்] பழைய காலத்து ஸம்ஸ்க்ருத ஸாஸனங்களை ஆராய்ச்சி பண்ணின புஸ்தகம் "ப்ராசீன லேகமாலை"ன்னு ஒண்ணு இருக்கு. அந்த ஸாஸனங்கள்ள வேங்கி நாட்டோடது ஒண்ணு இருக்கு. க்ருஷ்ணா நதிக்கும், கோதாவரிக்கும் நடுவுல இருக்கறது தான் வேங்கிநாடு. அந்த நாட்ல கெடச்ச தாம்ர [காப்பர்] ஸாஸனம் ஒண்ணை புஸ்தகத்ல போட்டிருக்கா. தெலுங்கு சீமைல ராஜ்யம் பண்ணிண்டிருந்த கீழை சாளுக்ய ராஜாக்களுக்கும், நம்ம தஞ்சாவூர் சோழ ராஜாக்களுக்கும் விவாஹ ஸம்பந்தம் இருந்துது. ப்ருஹதீஸ்வரர் கோவிலைக் கட்டின ராஜராஜ சோழனோட புத்ர வம்ஸம், பௌத்ரர்களோடேயே முடிஞ்சு போய்டுத்து. அவனோட தௌஹித்ரி [பெண்வழிப் பேத்தி] அம்மங்கா தேவி, ராஜராஜ நரேந்த்ரன்….ங்கற கீழைச் சாளுக்ய ராஜாவுக்குத்தான் வாக்கப்பட்டிருந்தா. அவாளோட புள்ளை குலோத்துங்க சோழன்தான் அப்றம் சோழ நாட்டுக்கு ராஜா ஆனது. அவன் தான் ஆந்த்ர தேஸத்ல வேதாத்யயனம் வ்ருத்தியாகணும்னு, தமிழ்நாட்டுலேர்ந்து 500 ப்ராஹ்மணாளைக் கொண்டு போய் வேங்கிநாட்டுல குடியமத்தினான். ஆந்த்ரால "த்ராவிடலு" ன்னு இன்னிக்கும் இருக்கறவா எல்லாருமே இந்த 500 ப்ராஹ்மணாளோட வம்ஸாவளிதான். நடராஜாவைப் பத்தி சொல்லிண்டிருந்தேன்.. நாமெல்லாம் ஆட வேண்டிய கூத்தையெல்லாம் சேர்த்து வெச்சு அவர் ஆடறார். நடராஜ விக்ரஹத்தோட தலேல படர்ந்தா மாதிரி ஒண்ணு இருக்கும். ரெண்டு பக்கமும் நீண்டுண்டு இருக்கும். அதுல சந்த்ரன், கங்கை ரெண்டுமே இருக்கும். என்னது அது? 

அதுதான் நடராஜாவோட ஜடாபாரம். இந்தக் காலத்ல photo எடுக்கறச்சே. "snap shot "ன்னு ஒண்ணு உண்டு. ஒரு வஸ்து சலனத்ல [movement] இருக்கறப்போ, திடீர்னு ஒரு அவஸரத்ல [pose] போட்டோ எடுக்கறதுதான் அது. நடராஜா ரொம்ப வேகமா நர்த்தனம் பண்றார். பண்ணி, அப்டி நிறுத்தப்போற ஸமயத்ல அவரோட ஜடாபாரம் ரெண்டு பக்கமும் நீட்டிண்டு இருக்கும். அந்த அவஸ்தையை [கோலத்தை], அந்தக் காலத்து ஶில்பி, மனஸ்ல எடுத்த "ஸ்நாப் ஷாட்"தான் அந்த ஸ்வரூபம். நடராஜாவோட கையில உடுக்கு இருக்கு. அது குடுகுடுப்பாண்டி வெச்சிருக்கறதை விடப் பெருஸ்ஸு, மாரியம்மன் கோவில் பூஜாரி வெச்சிண்டு இருக்கறதை விட சின்னது. அதுக்கு டக்கான்னும், டமருகம்ன்னும் பேர் உண்டு. பாதத்தோட தாளத்தை அனுஸரிச்சு, அந்த டமருவோட தாளமும் இருக்கும்.



Image may contain: 1 person, drawing
                                                 PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS


வாத்யங்கள்ள மூணு வகை. சர்ம வாத்யம் [டக்கா, மேளம், கஞ்சிரா, ம்ருதங்கம் மாதிரி தோல் வாத்யங்கள்], தந்த்ரி வாத்யம் [வீணை, பிடில் மாதிரி தந்தி [கம்பி] போட்டது] வாயுரந்த்ர வாத்யம் [நாயனம், புல்லாங்குழல் மாதிரி ஓட்டை போட்டு, காத்துனால ஊதற வாத்யம்]. 

இதுல சர்ம வாத்யம் தண்டத்தாலேயோ, ஹஸ்தத்தாலேயோ[கைகள்] அடிப்பா. அந்த வாத்யத்தை நிறுத்தறச்சே, சாப்பு குடுக்கறது, அப்டீன்னா… சேர்ந்தாப்ல சில அடி அடிக்கறது வழக்கம். அது மாதிரி நடராஜாவோட டமருகத்ல டான்ஸ் முடியற காலத்ல "ந்ருத்த அவஸானே" ன்னு ஒரு சாப்பு த்வனி உண்டாச்சு.

நடராஜா ந்ருத்யம் பண்றார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வ்யாக்ரபாதர் எல்லாரும் அவரைச் சுத்தி நிக்கறா. அவாள்ளாம் மஹா தபஸ்விகள். அதுனால நடராஜாவோட ந்ருத்தத்தை கண்ணால பாக்க முடிஞ்சுது. ஞான நேத்ரம் இருக்கறவாதான் அவரோட நடனத்தைப் பாக்க முடியும். க்ருஷ்ணனோட விஸ்வரூபத்தை தர்ஸனம்  பண்ற சக்தியை  பகவானே அர்ஜுனனுக்குக் குடுத்தார். அதே  சக்தியை வ்யாஸாச்சார்யாள் ஸஞ்சயனுக்கும் குடுத்து அவனையும் பகவானோட விஸ்வரூபத்தை தர்ஸனம் பண்ணி த்ருதராஷ்ட்ரனுக்கு வர்ணிக்கப் பண்ணினார். நடராஜாவோட டான்ஸ் கச்சேரில விஷ்ணு மத்தளம் கொட்டிண்டிருக்கார்; ப்ரஹ்மா தாளம் போட்டுண்டிருக்கார். இப்டியா…. ந்ருத்தம் முடியப் போற ஸமயத்ல, டமருகத்ல சாப்பு, கிடுகிடுன்னு 14  சப்தங்களா விழுந்துது. அந்த  சப்தங்களோட கணக்கு மாதிரியே வித்தைகளோட கணக்கும் பதினாலாத்தான் இருக்கு! ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தஸ வித்யா [14] ன்னா….. நடராஜாவோட சாப்பும் 14 சப்தத்தையே குடுத்துது! அப்போ அங்கே இருந்தவாள்ள பாணினி மஹரிஷிங்கறவர் அந்த 14  சப்தங்களையும், 14 ஸூத்ரங்களா வ்யாகரணத்துக்கு மூலமா வெச்சுண்டு "அஷ்டாத்யாயி" ங்கற இலக்கண மூல புஸ்தகத்தை எழுதினர். இந்த பதினாலு ஸூத்ரங்களையும் ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்போம். மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது.

அ இ உண்
ருலுக்
ஏ ஒங்
ஐ ஔச்
ஹயவரட்
லண்
ஞம ஙண நம்
ஜ ப ஞ்
க ட த ஷ்
ஜ ப க ட த ​ஸ் ​
க ப ச ட த சடதவ்
கபய்
சஷஸர்
ஹல்

ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்… இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்… பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்.
No automatic alt text available.

                                                   PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS 



​ஜய  ஜய  சங்கர      ஹர ஹர சங்க

                                      
ஜய  ஜய  சங்கர      ஹர ஹர சங்கர

Thursday, September 21, 2017





ஸ்ரீ காமாக்ஷி தாசன் 
**********************************

சென்னை- புதுப்பெருங்களத்தூரில், மணிமேகலை தெரு, ஸ்ரீலிங்கம் குடியிருப்பில் வசிக்கிறார் காமாட்சிதாசன் சீனிவாசன். சொந்த ஊர்- தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரம். இவரின் தகப்பனார் வெங்கட்ராமய்யர், காஞ்சி மடத்தில் (1901-1966) கார்வாராக கைங்கரியம் செய்து வந்தவர்.

தன்னை, ‘பெரியவாளின் அடிமை’ என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் காமாட்சிதாசன் சீனிவாசன், தனது 18-வது வயதில், முதன்முதலாக காஞ்சி மகாப் பெரியவாளைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

”மகா பெரியவா பீடாதிபதியா வர்றதுக்கு முன்னா டியே, மடத்துல கைங்கரியம் பண்ணிட்டிருந்தவர் என் அப்பா. அதனால, அவர்கிட்டேதான் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சுப்பாராம் பெரியவா.

அப்பாவிடம் ரொம்பச் சிநேகமா இருப்பார்.

அப்பா ஊருக்கு வரும்போதெல்லாம், என்னைப் பெரியவாகிட்ட அழைச்சிட்டுப் போகணும்னு சொல்லிட்டே இருப்பேன். அதுக்கான வேளை வரலே! இன்னிக்கு நாளைக்குன்னு தள்ளிப்போட்டுட்டே இருந்தார் அப்பா.
Image may contain: drawing



PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS

அது, 1958-ஆம் வருஷம். ஒரு நாள், பாதி ராத்திரில திடீர்னு விழிப்பு வந்தது எனக்கு. ஒருவித தெய்வீக அருள் வந்த மாதிரி உணர்வு. காமாட்சியம்மன் ஆயிரம் அகவல்னு சொல்ல ஆரம்பிச்சு, அப்படியே வரிவரியா எழுதவும் ஆரம்பிச்சுட்டேன். ஒரு மணி நேரத்துல, ஏதோ மழை பொழிஞ்ச மாதிரி… மெய்ம்மறந்த நிலையில, ஆயிரம் அகவலையும் எழுதி முடிச்சுட்டேன். இது எப்படி நடந்ததுன்னு எனக்கே தெரியலை. அம்மாகிட்ட போய்ச் சொன்னேன். பாவம், அவளுக்கும் ஒண்ணும் புரியல! ‘உடனடியா அப்பாவுக்குக் கடிதம் எழுதிப்போடு. பெரியவாகிட்ட இதைச் சொல்லட்டும்’னு சொன்னா.

அந்த நேரத்துல, சென்னை சம்ஸ்கிருத காலேஜ்ல முகாம் போட்டிருந்தார் பெரியவா. அவரிடம் இந்த விஷயத்தை அப்பா சொன்னதும்,  ’சீனிவாசனை இங்கே வரச் சொல்லு!’ன்னு பெரியவாகிட்டேருந்து உத்தரவாச்சு. நானும் உடனே கிளம்பி, சென்னை வந்தேன்.

காலேஜ்ல ஜேஜேன்னு கூட்டம். கி.வா.ஜ., கிருபானந்தவாரியார்னு பெரியவங்கள்லாம் இருந்தாங்க. பெரியவா முன்னாடி போய் பவ்வி யமா நின்னேன். ‘படிடா சீனிவாசா!’ன்னு பெரியவா சொன்னதும், கடகடவெனப் படிக்க ஆரம்பிச்சுட்டேன். ஓர் இடத்தில்… ’64-வது பீடத்து அரசியே போற்றி!’ன்னு படிக்கும்போது, ‘நிறுத்து’ன்னார் பெரியவா. அறையின் கதவைச் சாத்தவும் உத்தரவிட்டார். பிறகு, பூர்ணபலம் (உரித்த தேங்காய்), மேருவில் பதித்திருந்த சந்தன உருண்டை, குருவின் பாதுகை, ஒரு ஸ்ரீசக்ரம் வைத்து, வில்வத்தையும் போட்டு, ‘பஞ்சாயதன மூர்த்திகள்… பூஜைக்கு வெச்சுக்கோ. எடுத்துட்டுப் போ!’ன்னார் பெரியவா.

நான் புரியாமல் விழிச்சேன். ‘நான் என்ன பண்ணணும்? எப்படிப் பூஜை பண்ணறதுன்னு எனக்கு நியமங்கள் எதுவும் தெரியாதே’ன்னு தயக்கத்துடன் பெரியவாளிடம் கேட்டேன். பெரியவா சிரிச்சார். ஒண்ணும் தெரியாதவன் கிட்டே எப்படிப் பதில் சொல்லணும்னு அவருக்குத் தெரியாதா என்ன? அவர் கேட்டார்…

‘போற்றி அகவல், எப்படி எழுதினே?’

‘நான் எழுதலை. தானா வந்தது, பெரியவா!’


Image may contain: 2 people, drawing

PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS

‘அப்படிப் பூஜா முறையும் தானாவே வந்துடும் உனக்கு. எடுத்துண்டு போ!’ என்றவர், பூர்ண அனுக்கிரகம் பண்ணுவது மாதிரி ஆசீர்வாதம் பண்ணினார். ‘லோக க்ஷேமார்த்தமா பூஜை பண்ணிண்டு வா! எல்லாரும் நன்னா இருக் கணும்னு வேண்டிண்டு பூஜை பண்ணு!’ என்றும் அறிவுரை தந்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் எனக்கு!” – கண்கள் பனிக்க, நெஞ்சில் கைவைத்துச் சொன்ன சீனிவாசன், ஒருமுறை மகா

பெரியவாளே வீடுதேடி வந்து அனுக்கிரகம் செய்த சம்பவத்தையும் சிலிர்ப்புடன் விவரித்தார்.

”பெரியவா சொன்ன மாதிரியே பூஜைகள் செய்து வந்தேன். மூணு வருஷம் ஓடிப்போச்சு! 61-வது வருஷம் பிப்ரவரி 22-ஆம் தேதி. முன்னறிவிப்பு எதுவும் இல்லாம, உத்தமதானபுரம் வீட்டுக்கே வந்துட்டார் பெரியவா. வீட்டில்- மரத்தால் பண்ணின சின்ன கோயில்; அதுலதான் பெரியவா தந்ததையெல்லாம் வெச்சு பூஜை பண்ணிட்டிருந்தேன். பக்கத்திலேயே இருந்த பீரோ மீது சாய்ந்து உட்கார்ந்துண்டார் பெரியவா. பூஜையை அவருக்கும் சேர்த்துப் பண்ணினேன். அம்பாள் பேரிலேயும், பெரியவா பேரிலேயும் பூக்களைப் போட்டுண்டே இருந்தேன். மனசு நிறைஞ்சுபோச்சு.

அதுமட்டுமா? பூஜைக்குப் பால் தேவைன்னு தெரிஞ்சுண்டு, மணப்பாறையிலிருந்து  ஒரு பசு மாட்டை வாங்கிக் கொடுத்தார் பெரியவா!” என்ற சீனிவாசனின் முகத்தில் அப்படியரு பரவசம்.

”மகாபெரியவா கொடுத்த சந்தனம் வளர்ந்துண்டே இருக்கு. அவர் கொடுத்த தேங்காய், உள்ளே இளநீருடன் அப்படியே இருக்கு. என் வீட்டுக்கு ஸ்ரீகாமாட்சி பூஜையைத் தரிசிக்க வரும் அன்பர்கள், தங்களது பிரார்த்தனையையும், வழிபாட்டால் கிடைத்த பலன்களையும், சந்தோஷத்தையும் மனம் விட்டுப் பகிர்ந்துக்கும்போது மனம் பூரிச்சுப்போகும். எல்லாம் காஞ்சி மகானின் கருணை!

அன்னிக்குப் பெரியவா, ‘நீ உலகில் இதற்காகவே பிறந்த காமாட்சிதான். இப்படியே அருள் நிலையில் எழுதிக் கொண்டே இருப்பாய்!’னு ஆசி வழங்கி வாழ்த்தினார். அவர் சொன்னதுபோலவே, பூஜை செய்யும்போது ஏற்படும் அருள் நிலையில்… பாமாலைகள், சதகங்கள், ஸ்லோகங்கள், அருள் மொழிகள்… இப்படி 5,000 பக்கங்கள் எழுதியாச்சு!” என்று நெக்குருக விவரித்தவர், ”நான் ஸ்ரீமடம்  போய்விட்டாலே, நான் எழுதியதை வாசிக்கச் சொல்லி மெய்ம்மறந்து கேட்டுண்டே இருப்பார் மகாபெரியவா. இதனாலேயே மடத்தில், ‘சீனு வந்துட்டானா? இனிமே பெரியவாளோட பூஜை, பிட்சாவந்தனம் எல்லாமே சீனுவுக்குப் பிறகுதான்’னு வேடிக்கையா சொல்வா!”

மலரும் நினைவுகளில் மூழ்கியவர், சற்று நேரம் கழித்து ஏதோ ஞாபகம் வந்தவராக, மீண்டும் தொடர்ந்தார்…

”நான் 58-ல் அவரைப் பார்த்துட்டு ஆயிரம் அகவல் பாடின சமாசாரம் சொன்னேன், இல்லையா? அதே வருஷம் தேவகோட்டையிலே ஒரு கல்யாணம். என்னைக் கூப்பிட்டுப் பிரசாதம் எல்லாம் கொடுத்து, அந்தக் கல்யாணத்தை நடத்துகிற செட்டியாரிடம் கொடுக்கணும்னார் பெரியவா. எனக்குத் தயக்கம். அப்ப, எனக்கு 18- 19 வயசுதான்! ‘நீ தனியா போகவேண்டாம். உன்கூட ஏழெட்டுப் பேர் வருவா’ன்னார் பெரியவா.

சிவப்புக் குஞ்சலம் கட்டின ஸ்ரீமுகப் பிரம்பு,  பிரசாதம் எல்லாம் எடுத்துண்டு போனோம். செட்டியாருக்குச் சந்தோஷம். ஆசார- உபசாரம் பண்ணிட்டார்.

தன் வீட்டுக் கல்யாணத்துக்கு மடத்துலேருந்து பெரியவா ஸ்பெஷலா பிரசாதம் அனுப்பி, ஆசீர்வாதம் பண்ணினதுல ரொம்பக் குளிர்ந்து போயிட்டார் அவர். எங்க எல்லாருக்கும் சாப்பாடெல்லாம் பிரமாதமா போட்டு, 108 ரூபாய் சன்மானமும் கொடுத்தார். அப்புறம், சென்னைக்கு வந்து பெரியவாகிட்டே  செட்டியார் சந்தோஷப்பட்டதையும், 108 ரூபாய் கொடுத்ததையும் சொன்னேன்.

‘நீயே வச்சுக்கோ!’ன்னு சொன்ன பெரியவா,

‘உன்னை எதுக்காகப் போகச் சொன்னேன், தெரியுமா?’ன்னு கேட்டார். நான், ‘தெரியாது’ன்னேன். உடனே, ‘செட்டியாருக்கு ரொம்ப வருஷமா குழந்தையே இல்லை. காமாட்சியைப் பிரார்த்தனை பண்ணிக்கச் சொன்னேன். குழந்தையும் பிறந்தது. அதுக்கு காமாட்சின்னு பெயர் வைக்கச் சொன்னேன். நீதான் காமாட்சி பேர்ல அகவல் ஆயிரம் பாடி இருக்கியே! அதான், உன்னை அவர்கிட்டே அனுப்பினேன்!’ என்றார் பெரியவா.

‘காமாட்சிதான் எனக்கும் கருணை காட்டி னாள். செட்டியாருக்கும் அதே காமாட்சிதான் கருணை செய்தாள். இதை எனக்குப் புரிய வைக்கிறதுக்கு வாய்ப்பா ஒரு சம்பவம் பெரியவா ளுக்குக் கிடைச்சுதே… அதுதான் ஆச்சரியம்!” என்று கைகூப்பி வணங்கிய 72 வயது முதியவர் காமாட்சிதாசன் சீனிவாசன், 1989 முதல் குடும்பத்துடன் சென்னை- பெருங்களத்தூரில் குடியேறிவிட்டாராம்.

இங்கு ஒரு வாடகை வீட்டில், இன்றும் தொடர்கிறது அவரது காமாட்சி பூஜை!


Image may contain: 1 person, drawing


PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS


Thursday, September 14, 2017

ஆதிசங்கரரின் மறு அவதாரமான நம் பெரியவா
என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்
ஸ்ரீலக்ஷ்மிநாராயணன் என்ற பக்தர்.
Image may contain: 1 person, drawing

PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS

ஸ்ரீலக்ஷ்மி நாராயணனின் அப்பாதாத்தா இவர்கள் நல்ல நிலைமையில் இருந்தவர்கள்தான்.ஆனாலும்விதிவசத்தினால் நொடித்தனிலையில் லக்ஷ்மிநாராயணன் மனம் மிகவும் வறுமையின் கொடுமையால் வாடியிருந்தார்.  க்ரோம்பெட் MIT கல்லூரியில் Lab engineer ஆக இருந்த இவருக்கு மாசம் 108 ரூபாய்தான் வருமானம். இவர் வருவாயில்
18 ஜீவன்கள் காலக்ஷேபம் நடந்தாக வேண்டும். இவர் தந்தையும் பெரிய
உத்யோகத்தில் இல்லை. சில வருஷங்கள் ஸ்ரீமடத்தில் இவர் அப்பா  ஒரு பதவியில் கைங்கர்யம் செய்தது மட்டுமேஆனால் தினந்தோறும் சிவ பூஜையைக் கைவிட்டதில்லை.

வயதான தந்தை, மனைவி குழந்தைகளோடு சொற்ப வருமானத்தில் அரை வயிறு கஞ்சி சாப்பிட்டுக் காலம்கடத்தி வந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ட் டைம் வேலைகளுக்கும் சென்று வந்தார். ஆனாலும் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால்கடவுள் நம்பிக்கையே அறவே இல்லாமல் இருந்தார்.
அதனால் கடின சித்தம் கொண்டவராக மாறியிருந்தார்.தந்தை விடாமல் சிவ  பூஜை செய்வது கண்டு ''இப்படிகஷ்டப்படரது உன் ஸ்வாமிக்குத் தெரியவில்லையே பின் எதற்கு இந்தப் பூஜையெல்லாம்?''என்று கோபப் படுவதுண்டு.

இந்நிலையில் பெரியவா இவரைத் தடுத்தாட்கொள்ளவே மாம்பலம் ராமேஸ்வரம் தெருவில் குடி கொண்டு அருள வந்தார்.ஆனால் பெரியவா தரிசனத்துக்கு நேரம் இல்லாததோடு, இவ்வளவு கஷ்டப்படும் நமக்கு அருளாத இவர் தரிசனம் நமக்கு எதற்கு என்று அப்பாவிடம்
வாதாடவும் செய்வார். ''உன் பெரியவாளை நம்மளைக் காப்பாத்தச் சொல்லேன்'' என்று அப்பாவிடம் விதண்டவாதம் செய்வார். இவர் எட்டு வயதாக இருந்தபோது பெரியவா இவர் கிராமத்துக்கு வருகை புரிந்திருக்கிறார். அந்த சமயம் அப்பாவுடன் தினம் பெரியவா தரிசனத்துக்குப் போனதுண்டு. பெரியவாளுக்கும் இவர்களுடைய அன்றைய செல்வச் செழிப்பான நிலை தெரியும். அப்பா பெரியவா கைங்கர்யம் செய்திருந்ததால் மாம்பலம் காம்ப்பில் வாஞ்சையோடு குடும்ப நிலை பற்றியெல்லாம் விஜாரித்ததோடு, ''நாளை வெள்ளிக் கிழமை நான் உங்காத்துக்கு வரேன்'' என்று சொல்ல அப்பாவுக்கு அளவிடமுடியா
சந்தோஷம்! பிள்ளை வேலையிலிருந்து வரும் வரை இரவு காத்திருந்து ''நாளை பெரியவா ஆத்துக்கு வரார், நீ காலேஜ்லேர்ந்து நேரா ஆத்துக்கு வந்துடு, வேற வேலைக்குப் போக வேண்டாம்'' என்று சொன்னார். ''எதுக்காக அவர் நம்மாத்துக்கு வரணும்'' என்று 
அலக்ஷியமாகக் கேட்டுவிட்டு சென்றுவிட்டதோடு, மறு நாள் காலேஜ்லேர்ந்து வீட்டுக்கு வராமல் பார்ட் டைம் வேலைக்கும் சென்றுவிட்டார். தெய்வம் குறிப்பிட்டபடி அவர் அகத்துக்கு மறு நாள் நுழைந்துவிட்டது! சாக்ஷாத் மாஹாலக்ஷ்மி போன்று அங்கு வந்து பூஜை அறையில் ஸ்ரீசக்ரத்தை அந்த வீட்டுப் பூஜா க்ருஹத்தில் வைத்து, அனைவரையும் ஆசீர்வதித்து அளவில்லா ஆனந்தம் அடையச் செய்தார்!

ஆதங்கம், கோவத்துடன் தாந்தை இவர் வருகைக்கு காத்திருந்தார். ''மஹா பாவி..இப்படியா அலக்ஷ்யம் செய்வே, எப்படிப்பட்ட மஹான் நம் அகத்துக்கு வந்திருக்கா, நான் நேத்து அத்தனை சொல்லியும் எத்தனை திமிர் இருந்தா இப்படிப் பண்ணுவே'' என்று அடக்க மாட்டாத
கோபத்துடன் கத்தினார்.லக்ஷ்மினாராயணன் நெஞ்சமும் அன்று அந்த சுடு சொற்கள் கேட்டு மனம் கரைந்து கண்களில் நீருடன் உரங்கச் சென்றுவிட்டார்.

மறு தினம் அப்பா தன் மகனின் நிலைமையைக் குற்ற உணர்வுடன் பெரியவா சன்னிதியில் முறையிட்டார்.

''அவனை நாளைக்கு அழைச்சிண்டு வா""
ஞாயிறன்று லக்ஷ்மி நாராயணனுக்குப் பெரியவா தரிசனத்தைத் தவிர்க்க இயலவில்லை.பூஜை முடிந்து எல்லாருக்கும் தீர்த்த ப்ரஸாதம் 
வழங்கிக் கொண்டிருக்கும்போது இவரும் வேண்டா வெறுப்பாக அப்பாவுடன் க்யூவில் போய் நின்றார். இவர் முறை வந்த போது தீர்த்தம் கொடுக்காமல் சைகையால் ஒரு பக்கம் தள்ளை நிற்குமாறு சைகை செய்தார் பெரியவா. மத்தவாளுக்குத் தீர்த்தம் வழங்கியபடியே இவரிடம் பேச ஆரம்பித்தார் ''என்னை ஞாபகம் இருக்கா மண்டு''என ஆரம்பித்தார்.

எட்டு வயசில் பெரியவா தரிசனத்தின் போது மண்டு என்று கூப்பிட்டது அப்போது ஞாபகம் வந்தது.

''ஆமா அப்பா என்னவோ சொல்றாரே..நீ ஏன் இப்படி
இருக்கே?'' ''சரி நீ எங்கே வேலை பண்றே , எத்தனை  மணிக்கு வரே?''

மெதுவாக தன் நிலை பற்றிச் சொன்னார். ஏன் நாங்க இப்படி கஷ்டப்படறோம்?''
''கர்மம் டா ''

அதுவரை எதிர்த்து ஒன்ரும் சொல்லாதவர் ''அப்படின்னா?'' என்று எதிக் கேள்வி கேட்டார்.
''கர்மான்னா என்னன்னா கேக்கறே? அதைச் 
சொன்னாலும் புரியாது,சொல்லவும் தெரியாது''

ஆதி சங்கர பகவத் பாதாள் குழந்தையா பிக்ஷை எடுக்கச் சென்ற போது ஒரு அம்மாவாத்து வாசல்லே நின்று பவதி பிக்ஷாம் தேஹி'' என்று கேட்டார். அன்று த்வாதசி. வீட்டில் ஒரு மணி அரிசி இல்லை பிக்ஷயிட ஆனால் ஒரு காய்ந்த நெல்லிக் கனி மட்டும் இருந்தது. வேறு வழியில்லாமல் குழந்தை சங்கரனுக்கு அதனை பிக்ஷையிட்டாள் அந்த அம்மா.குழந்தை சங்கரன்  ;;இந்த அம்மா இவ்வளவு கஷ்டப்படறா, ஆனால்  இருந்த ஒரு நெல்லிகாயையும் எனக்கு பிஷை போட்டுவிடாள். ''அம்மா மஹாலக்ஷ்மி இவள் தரித்ரத்தை கர்மவினையானாலும் நீ போக்கிவிடம்மா'' என்று கனகதாரா ச்லோகத்தைப் பாட
தங்க நெல்லிகனியாகவே மழை பொழிந்தது! லோகமாதா காலைப் பிடிச்சுக்கோ..அம்பாளை உங்காத்தில் கொண்டு வெச்சுருக்கேன், அவளைக் கெட்டியா புடிச்சுக்கோ..தாயாட்டமா உன்னைக் காப்பாத்துவா..'' 


Image may contain: 1 person, drawing

                  PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS


இப்படியாக1 1/2 மணி நேரம் தீர்த்தம் கொடுத்துக் கொண்டே
அருளாசி வழங்கினார் பெரியவா!
(எத்தகைய பாக்யம்!)


அப்போதும் லக்ஷ்மி நாராயணனுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் மனைவி மரைமுகமாக கனகதாரா ச்லோகத்தைப் பெரியவா உபதேசம் செய்ததாகவே நினைத்தால். ஆனால் இவர் அதை லக்ஷ்யம் செய்யவில்லை. மூன்று வாரம் சென்றது. ஒரு நாள்  வழக்கம் போல் 10 மணிக்கு வீடு திரும்பியவர் சட்டையை மட்டும் கழற்றிவிட்டு கைகால் கூட அலம்பாமல் கனகதார ஷ்லோகத்தைச் சொல்ல ஆரம்பித்தார்! ஆடுத்த நாளே அதன் மகிமை தெரிந்தது! ஆதி சங்கரரின் அவதாரமான பெரியவா உபதேசம் செய்ததாச்சே!

ஆடுத்த நாள் இவர் மேலதிகாரி அயல் நாடு யுனிவர்சிடிக்கு வேலை மாற்றம் ஆகி சென்ரார். விமான நிலையத்தில் ஒரு கவரை இவரிடம் கொடுத்து.அதை டைரக்டரிடம் கொடுக்குமாறு சொன்னார். எப்போதும் போல் அலக்ஷியமாக அந்தக் கவரை தூக்கி எறிந்துவிட்டு மூன்றாம் நாள் அந்தக் கவரை டைரக்டரிடம் கொடுத்து தயக்கத்துடன் நின்றார்.

கவரைப் பிரித்துப் படித்த டைரக்டர் ''உட்காருங்கள்..உங்களைப் பற்றி இந்திரன் சந்திரன் என்றெல்லம் அந்த அயல் நாட்டுக்காரர் எழுதியிருக்கார்; உங்க சம்பளத்தைஎட்டு மடங்கா உயர்த்தச் சொல்லி எனக்கு ஆர்டர் போட்டிருக்கார்'' என்று இவரை திகைக்கச் செய்தார்.

ஸ்ரீமஹாபெரியவாளின் அனுக்ரஹம் அன்றிலிருந்து கொட்ட ஆரம்பித்துவிட்டதாம்!
மஹாலக்ஷ்மி கொட்டு கொட்டுன்னு கொட்றா! என்று இவர் பூரிக்கும் அளவுக்கு இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி ஒரு எலெக்ரானிக் உபகரணத் தொழில் செய்து இவரை கோடீஸ்வரராக ஆக்கிவிட்டது!!

ப்ரத்யக்ஷ பரமேச்வரன் சாக்ஷாத் ஆதி சங்கர அவதாரம் நம் பெரியவா!

Image may contain: drawing


               PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர