பல்லக்கு தூக்கிய எமன்
வீதியில் ராமா நாம சங்கீர்த்தனம்
பாடியபடி பஜனை கோஷ்டி ஒன்று
சென்று கொண்டிருந்தது .
அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு , ராம
நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர் இதை
ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக
ஒரே ஒரு முறையாவது சொல்லிப்
பார் என்றார் .
அவனும் அப்படியே செய்தான் .
காலகிரமத்தில் இறந்து போனான் .
அவன் ஆத்மாவை இழுத்துப் போய்
யமதர்மராஜன் முன் நிறுத்தினர் .
அவரும் , அவனுடைய பாப , புண்ணிய
கணக்கை பரிசீலித்து , ஒருமுறை ராம நாமத்தை
சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ
கேள் என்றார் .
ராம நாமத்தை உபதேசித்த ஞானி
அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு
வந்தது . அதனால் , அதற்கு விலை
கூற மறுத்து , ராம நாமத்திற்கு , நீங்கள்
என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ ,
அதைத் தாருங்கள் என்றான் .
திகைத்த யமதர்ம ராஜா ராம
நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு
போடுவது என்று எண்ணி இந்திரன்
தான் இதை தீர்மானிக்க வேண்டும்
வா இந்திரனிடம் போகலாம் என்றார் .
'நான் வருவதென்றால் , பல்லக்கில் தான் வருவேன் அத்துடன் ,
பல்லக்குத் தூக்குபவர்களில் , நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் .
சம்மதமா என்றான் .
இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால் ,
ராம நாமம் , மிகுந்த மகிமை
உடையதாகத் தான் இருக்க வேண்டும் ;
அதனால் தான் இப்படி எல்லாம்
பேசுகிறான் என்று எண்ணிய யமதர்ம
ராஜா , அதற்கு சம்மதித்து , அவனை
பல்லக்கில் உட்கார வைத்து , சுமந்து
கொண்டு இந்திரனிடம் போனார் .
இந்திரனோ ராம நாமத்தை என்னால்
எடை போட முடியாது பிரம்மதேவரிடம்
கேட்போம் ; வாருங்கள் என்றார் .
யமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று
மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான் .
அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான் . பல்லக்கை
சுமந்து கொண்டு , பிரம்மாவிடம் சென்றனர் .
அவரும் ராம நாம மகிமை
சொல்ல , என்னால் ஆகாது வைகுண்டம்
போய் , அந்த பரம்பொருளையே கேட்கலாம்
வாருங்கள் என்று சொல்ல , அவரும்
பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று .
அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று
இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம
நாமத்தை சொல்லியிருக்கிறது ; அதற்காக , இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை
தாங்கள் தான் கூற வேண்டும் .
எங்களால் முடியவில்லை என்றனர் .
இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து ,
நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே ...இதிலிருந்தே ராம நாம மகிமை
தெரியவில்லையா ?? என்று சொல்லி பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன்
சேர்த்துக் கொண்டார் பகவான் !!
கதை மிக அழகாக உள்ளது.
ReplyDelete>>>>>
அதுவும் கொட்டை கொட்டையாக மிகப்பெரிய எழுத்துக்களில் வெளியிட்டுள்ளது மேலும் படிக்க மிகவும் இனிமையாக உள்ளது.
ReplyDelete>>>>>
முத்தான மூன்று படங்களும் வெகு அருமை. அதுவும் அடியில் உள்ள இரண்டும் அபாரமாக உள்ளன.
ReplyDelete’பல்லக்கு தூக்கிய எமன்’ என்ற தலைப்பைப் பார்த்ததும் முதலில் பயந்தே போய் விட்டேன்.
ReplyDelete>>>>>
எமனும், இந்திரனும், பிரும்மாவுமே பல்லக்குத்தூக்கிக் கொண்டு அவனை ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் கொண்டு சென்றது, கேட்க மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
ReplyDelete>>>>>
ராம நாம மஹிமை அறிந்ததுதான் என்றாலும், அதனை அவன் ஒரேயொரு முறை மட்டுமே சொல்லிவிட்டு, தனக்குக் கிடைத்த வாய்ப்பினை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளான். நம் ஜெயா போலவே அவன் நல்ல புத்திசாலியாக்கும் :)
ReplyDelete>>>>>
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ReplyDeleteஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
பதிவுக்கும் பகிர்வுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி, ஜெ.
அன்புடன் கோபு அண்ணா
ஆஹா ராம நாமத்துக்கு என்ன ஒரு மகிமை. முத்தான கதை மூலமாக சொன்னது அழகோ அழகு..படிக்கும்போதே ராம நாமம் மனதில் தோன்றுகிறது.
ReplyDelete