என் கணவரின் நெடு நாள் ஆசை, எந்த ஊருக்குச் சென்றாலும் இது போல் காமதேனு சிலை இருக்கிறதா என்று ஒவ்வொரு கடைக்கும் சென்று பார்ப்பார். பொதுவாக ஒரு பக்கம் லட்சுமியும், மற்றொரு பக்கம் விநாயகரும் இருக்கும் சிலைகள்தான் கிடைக்கும்.
என்னை BOOK FAIRக்குத்தான் அழைத்துச் செல்லவில்லை. இன்று மயிலை கபாலி கோவிலுக்குச் சென்றுவிட்டு அப்படியே GIRI TRADERS ல் ஏதாவது புத்தகங்கள் வாங்கிக்கொண்டுவருவோம் என்று கட்டாயப்படுத்தி அவரை அழைத்துச் சென்றேன். என்ன ஆச்சரியம், GIRI TRADERSல் அவர் ஆசைப்பட்ட சிலை கிடைத்தது. வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்து சந்தனம், குங்குமம் இட்டு, ஆராதித்தாயிற்று. இன்று அவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சி.

காமதேனு காயத்ரி மந்திரம்
ஓம் சுபகாயை வித்மஹே காமதாத்ரியை
சதீமஹி தந்தோ தேனு:
ப்ரசோதயாத்.
பசு காயத்ரி மந்திரம்:-
ஓம் பசுபதயேச வித்மஹே மகா தேவாய தீ மஹி தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.
பசு காயத்ரி மந்திரம்:-
ஓம் பசுபதயேச வித்மஹே மகா தேவாய தீ மஹி தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.
பசுவானவள்
பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ
கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம்
சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற
புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக
அழகானது. பிரும்ம சிருஷ்டியில் உலகம்
உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன்
உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான
தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள்.
இதில் இரண்டு பேர்கள் தாமதமாக
வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும்.
பசுவின் உடலில் இவர்களுக்கு இடம்
இல்லை.
லட்சுமியும்
கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள்.
எங்கேயாவது இருக்க ஓர் இடம்
கொடுத்தால் போதும் என்று கெஞ்சினார்கள்.
பசுவும், தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு
அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே,
ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும்
சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில்
இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும்
கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த
இடத்தில் வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள்.
அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில்
லட்சுமியும், கங்கையும் இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின் சாணமும்,
கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி
லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.
வைகுண்டம்,
ஸத்யலோகம் போன்று கோலோகம் என்று
உள்ளது. அதில் ராதிகையுடன் ஸ்ரீகிருஷ்ணன்
பக்த ரக்ஷகனாக இருக்கிறார். அங்கு காமதேவனைப் படைத்து
அதன் கன்றுகளை கோலோகம் முழுவதும் வைத்து
கிருஷ்ணனும் ராதையும் பூஜை செய்வதாக தேவி
பாகவதத்தில் இருக்கிறது. இந்திர பூஜையை விட
கோ பூஜையே மேலானது என்று
ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். கோமாதாவை லட்சுமியாக பாவித்து
வேதோக்த்த ஸ்ரீஸுக்தத்தினால் ஓம் ஸுரப்யை நம:
என்னும் மந்திரம் சொல்லி ஆவாஹனாதி தூபதீப
நைவேத்யம் முதலானவைகளுடன் ஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்ய மற்றும்
பிரும்ம தேவன் சரஸ்வதியுடனும் இந்திரன்
இந்திராணியுடனும் பூஜை செய்தார்கள்.
நமோ தேவ்யை மஹா தேவ்யை
ஸுரப்யை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே
ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம்
சாயை நமோ நம
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே
நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம்
பரம்
ஸ்ரீதாயை
தன தாயை ச வ்ருத்தி
தாயை நமோ நம
சுபதாயை
ப்ரஸன்னாயை கோப தாயை நமோ
நம
யசோதாயை
கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ
நம
இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச
ய: படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ
கீர்த்திமான்
புத்ர வான் பவேத்
இந்த ஸ்லோகத்தை கூறி கோபூஜை, பிரதட்சிணம்
செய்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
- பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்
- கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
- சிரம் - சிவபெருமான்
- நெற்றி நடுவில் - சிவசக்தி
- மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
- மூக்கினுள் - வித்தியாதரர்
- இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
- இரு கண்கள் - சந்திரர், சூரியர்
- பற்கள் - வாயு தேவர்
- ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
- ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
- மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
- உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
- கழுத்தில் - இந்திரன்
- முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
- மார்பில் - சாத்திய தேவர்கள்
- நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
- முழந்தாள்களில் - மருத்துவர்
- குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
- குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
- குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
- முதுகில் - உருத்திரர்
- சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
- அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
- யோனியில் - ஏழு மாதர்கள்
- குதத்தில் - இலக்குமி தேவி
- வாயில் - சர்ப்பரசர்கள்
- வாலின் முடியில் - ஆத்திகன்
- மூத்திரத்தில் - ஆகாய கங்கை
- சாணத்தில் - யமுனை நதி
- ரோமங்களில் - மகாமுனிவர்கள்
- வயிற்றில் - பூமாதேவி
- மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
- சடாத்களியில் - காருக பத்தியம்
- இதயத்தில் - ஆசுவனீயம்
- முகத்தில் - தட்சிணாக்கினி
- எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
- எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.